ETV Bharat / entertainment

இயக்குநர் சங்கத்திற்கு ரூ.5 லட்சம் நன்கொடை - நடிகர் பிரசாந்த் சார்பில் வழங்கல்!

author img

By

Published : Apr 6, 2022, 6:37 PM IST

நடிகர் பிரசாந்தின் பிறந்தநாளை ஒட்டி இயக்குநர் சங்கத்திற்கு ரூ.5 லட்சம் நன்கொடையாக, அவரது தந்தையும் இயக்குநருமான தியாகராஜன் வழங்கினார்.

இயக்குனர் சங்கத்திற்கு ரூ.5 லட்சம் நன்கொடை - நடிகர் பிரசாந்த் சார்பில் வழங்கல்!
இயக்குனர் சங்கத்திற்கு ரூ.5 லட்சம் நன்கொடை - நடிகர் பிரசாந்த் சார்பில் வழங்கல்!

சென்னை: நடிகர் பிரசாந்தின் பிறந்தநாளான இன்று அவரது தந்தை தியாகராஜன் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் பிரசாந்த், தியாகராஜன், இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, வெங்கடேஷ், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, இசை அமைப்பாளர் தீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இயக்குனர் சங்கத்திற்கு ரூ.5 லட்சம் நன்கொடை - நடிகர் பிரசாந்த் சார்பில் வழங்கல்!
இயக்குநர் சங்கத்திற்கு ரூ.5 லட்சம் நன்கொடை - நடிகர் பிரசாந்த் சார்பில் வழங்கல்!

இதுகுறித்து இயக்குநர் மற்றும் நடிகர் தியாகராஜன் கூறுகையில்,' 'அந்தகன்' படம் பெரிய நடிகர், நடிகைகள் இணைந்துள்ள திரைப்படம். 'அலைகள் ஓய்வதில்லை' படத்திற்குப்பிறகு கார்த்திக் இப்படத்தில் மிகுந்த துள்ளலுடன் நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். மிகுந்த சிரத்தையுடன் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியில் மெகா ஹிட்டடித்த 'அந்தாதூன்' படத்தை தமிழில் மறுஆக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்குப்பிறகு பிரசாந்த் தொடர்ந்து படங்கள் செய்யவேண்டும் என ஆசை. உதவி இயக்குநர்களுக்கு இயக்குநர் சங்கம் சார்பில் பள்ளி தொடங்க வேண்டும். இதற்காக இயக்குநர் சங்கத்திற்கு பள்ளி அமைக்க எனது சார்பில் ரூ.5 லட்சம் நன்கொடையாக வழங்குகிறேன்' எனத் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய ஆர்கே.செல்வமணி, 'பிரசாந்த் வில்லன் வேடத்தில் நடித்தால் நன்றாக இருக்கும்' என்றார்.

இதையும் படிங்க: இஸ்லாமிய நாட்டில் பீஸ்ட் படத்திற்கு தடை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.